என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதப்பாண்டியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்6 March 2020 10:23 AM GMT (Updated: 6 March 2020 10:23 AM GMT)
பூதப்பாண்டியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
தோவாளை குறத்தியறை பாலர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஹரிகரன் (வயது 21).
மணியின் மகளை இறச்சகுளம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் ஹரிகரன் தனது தாயாரிடம் சென்று மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தாயாருக்கும், மகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிகரன் தாயாரை தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் இறச்சகுளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஹரிகரன் மட்டும் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஹரிகரன் வீட்டில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஹரிகரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த ஹரிகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஹரிகரனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
தங்கைக்கு வளைகாப்பு நடந்த அன்றே சகோதரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தோவாளை குறத்தியறை பாலர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஹரிகரன் (வயது 21).
மணியின் மகளை இறச்சகுளம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் ஹரிகரன் தனது தாயாரிடம் சென்று மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தாயாருக்கும், மகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிகரன் தாயாரை தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் இறச்சகுளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஹரிகரன் மட்டும் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஹரிகரன் வீட்டில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஹரிகரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த ஹரிகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஹரிகரனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
தங்கைக்கு வளைகாப்பு நடந்த அன்றே சகோதரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X