search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தஞ்சை அருகே ஜெப கூடத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

    தஞ்சை அருகே ஜெப கூடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின் மனைவி சவுந்தர்ராணி (வயது 60). மாயக்கண்ணன் இறந்து விட்டார். தஞ்சையை அடுத்த திருமலை சமுத்திரம் அருகே ஆத்மநேசர் ஜெபக்கூடம் உள்ளது. இங்கு பல மாவட்டங்களில், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி பிரார்த்தனை செய்வார்கள். சவுந்தர்ராணியும் கடந்த 15 வருடங்களாக இங்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சவுந்தர் ராணி தனியாக ஆத்ம நேசர் ஜெபகூடத்திற்கு வந்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று அதிகாலை திடீரென ஜெபகூடத்திலேயே மண்எண்ணையை அவரின் உடலில் ஊற்றி பற்ற வைத்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு விழித்த அருகில் இருந்த பக்தர்கள் தீயை அணைத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சவுந்தர் ராணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சவுந்தர் ராணியின் மகன் ராஜேஷ் (31) வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வல்லம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×