என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே பைக்கில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழப்பு
Byமாலை மலர்6 March 2020 8:43 AM GMT (Updated: 6 March 2020 8:43 AM GMT)
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள ரெங்கப்பனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவரது மனைவி கருப்பாயி (32). இவர்களுக்கு மலர்கொடி (19), மணிகண்டன் (16), சந்தோஷ் (14) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் மட்டும் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற 2 பேரும் மில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
கணவன், மனைவி 2 பேரும் காளவாசலில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்தனர். செங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக திடீரென சுப்பிரமணி பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி கீழே விழுந்தனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சைக்கிளில் வந்த சத்யா நகரைச் சேர்ந்த விஜயகுமார் (45), சுப்பிரமணி ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். பின்னர் சுப்பிரமணி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தாய், தந்தை 2 பேரையும் பறிகொடுத்த 3 குழந்தைகளும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
திண்டுக்கல் அருகே உள்ள ரெங்கப்பனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவரது மனைவி கருப்பாயி (32). இவர்களுக்கு மலர்கொடி (19), மணிகண்டன் (16), சந்தோஷ் (14) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் மட்டும் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற 2 பேரும் மில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
கணவன், மனைவி 2 பேரும் காளவாசலில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்தனர். செங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக திடீரென சுப்பிரமணி பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி கீழே விழுந்தனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சைக்கிளில் வந்த சத்யா நகரைச் சேர்ந்த விஜயகுமார் (45), சுப்பிரமணி ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். பின்னர் சுப்பிரமணி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தாய், தந்தை 2 பேரையும் பறிகொடுத்த 3 குழந்தைகளும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X