என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவி காய்ச்சலுக்கு உயிரிழப்பு
Byமாலை மலர்6 March 2020 5:05 AM GMT (Updated: 6 March 2020 5:05 AM GMT)
மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அடுத்துள்ள பெத்திக்குட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது48). கூலி தொழிலாளி.
இவரது மனைவி செல்வி(43). இவர்களுக்கு 6 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சஞ்சனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து சஞ்சனாவின் பெற்றோர் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மாணவி சஞ்சனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அவரை மீண்டும் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சஞ்சனா சாதாரண காய்ச்சலுக்கு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும்.
சிறுமுகை அடுத்துள்ள பெத்திக்குட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது48). கூலி தொழிலாளி.
இவரது மனைவி செல்வி(43). இவர்களுக்கு 6 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சஞ்சனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து சஞ்சனாவின் பெற்றோர் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மாணவி சஞ்சனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அவரை மீண்டும் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சஞ்சனா சாதாரண காய்ச்சலுக்கு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X