search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவி காய்ச்சலுக்கு உயிரிழப்பு

    மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    சிறுமுகை அடுத்துள்ள பெத்திக்குட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது48). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செல்வி(43). இவர்களுக்கு 6 வயதில் சஞ்சனா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சஞ்சனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து சஞ்சனாவின் பெற்றோர் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் குணமாகவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மாணவி சஞ்சனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அவரை மீண்டும் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சஞ்சனா சாதாரண காய்ச்சலுக்கு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×