search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    மதுரையில் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் தீ விபத்து

    மதுரையில் ‘எலக்ட்ரிக் பைக்‘ விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் வாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் செல்லூரில் உள்ள திண்டுக்கல் மெயின் ரோட்டில் ‘எலக்ட்ரிக் பைக்‘ விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு ‘பேட்டரி சார்ஜ்’ செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் 11 எலக்ட்ரிக் பைக் மற்றும் குளிர்சாதன அறை தீயில் எரிந்து சேதமடைந்ததாக செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×