search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கிருஷ்ணகிரி புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக, போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா போலுப்பள்ளியில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

    இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சர் வருகையை முன்னிட்டு  சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×