search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேய்குளம் அருகே மாவு எந்திரம் திருடியவர் கைது

    பேய்குளம் அருகே மாவு எந்திரம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    பேய்குளம் அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் பிரின்ஸ் துரை. இவரது மகன் ஜேம்ஸ் துரை. இவருக்கு சொந்தமான அரிசி ஆலை பேய்குளத்தில் உள்ளது. அந்த ஆலையை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்திருந்தார்.

    ஒப்பந்தம் முடிந்ததும் காமராஜ் ஆலையை மீண்டும் ஜேம்ஸ்துரையிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த ஆலையில் மாவு இடிக்கும் எந்திரம் ஒன்று காணாமல் பேய் உள்ளது.

    இது குறித்து ஜேம்ஸ்துரை சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாவு எந்திரத்தை காமராஜ் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×