என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேய்குளம் அருகே கட்டிடத்தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
Byமாலை மலர்3 March 2020 7:56 AM GMT (Updated: 3 March 2020 7:56 AM GMT)
பேய்குளம் அருகே கட்டிடத் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
பேய்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 37), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கோமதி.
கடந்த 29-ந்தேதி சிவபெருமாளும் அவரது மனைவியும் நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மறுநாள் 1-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரோவில் இருந்த 1 பவுன் தங்க மோதிரம், 1¼ பவுன் கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1500 உள்பட பொருட்களை யாரோ மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பேய்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 37), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கோமதி.
கடந்த 29-ந்தேதி சிவபெருமாளும் அவரது மனைவியும் நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மறுநாள் 1-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரோவில் இருந்த 1 பவுன் தங்க மோதிரம், 1¼ பவுன் கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1500 உள்பட பொருட்களை யாரோ மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X