search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பேய்குளம் அருகே கட்டிடத்தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

    பேய்குளம் அருகே கட்டிடத் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    பேய்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 37), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கோமதி.

    கடந்த 29-ந்தேதி சிவபெருமாளும் அவரது மனைவியும் நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மறுநாள் 1-ந்தேதி வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரோவில் இருந்த 1 பவுன் தங்க மோதிரம், 1¼ பவுன் கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1500 உள்பட பொருட்களை யாரோ மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×