search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் இன்று காலை மொபட் மோதி 8 வயது சிறுமி பலி

    கோவையில் இன்று காலை சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுமி மொபட் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடவள்ளி:

    அசாம் மாநிலம் கவுகாத்தி சமூகாரி போஸ்ட் பஜார் வீதியை சேர்ந்தவர் ராஜூவளி. இவருக்கு திருமணம் ஆகி பர்ஜூனாகத்து(8) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கோவை வந்தார். பின்னர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள புத்தூர் பகுதியில் இருக்கும் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி அங்கு பாக்கு பிரித்து எடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பர்ஜூனாகத்து அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக புத்தூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக நரசீபுரம் கார்ப்பரே‌ஷன் வங்கியில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவர் மொபட்டில் வந்தார்.

    அப்போது புத்தூர் மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற பர்ஜூனாகத்து மீது மாலதியின் பைக் மோதியது. இதில் பர்ஜூனாகத்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×