என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி படுகாயம்
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 65). இவர் இன்று காலை 7 மணி அளவில் சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டர் பற்ற வைத்துள்ளார்.
அப்போது தீ அதிகளவில் பரவியதால் தீ கொழுந்து விட்டு எரிந்து வீடு முழுவதும் எரிந்தது. இதில் சிலிண்டர் வெடித்ததில் முனியம்மாள் மற்றும் அவரது கணவர் சின்னப்பன் வயது 75 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து முனியம்மாள் மற்றும் சின்னப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தீ முழுவதும் எரிந்ததில் வீட்டில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்