search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுவாமிமலை அருகே கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் கைது

    சுவாமிமலை அருகே கொலை மிரட்டல் வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அடுத்த அசூர் மேட்டு தெருவைச் சேர்ந்த குருமூர்த்தி இவருக்கு சத்யா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகள் சத்யாவை ரெட்டிப்பாளையம் அரசூர் பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மகன் கதிரேசன் (வயது 33) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் சத்யா கோபித்துக்கொண்டு தனது தந்தை குருமூர்த்தி வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது கணவர் கதிரேசன் மற்றும் அவர் உறவினர்கள் மாரிமுத்து, ரஞ்சித் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த அசூரில் உள்ள மாமனார் குருமூர்த்தி, அவரது மகன் சந்தோஷ் வசிக்கும் வீட்டிற்கு வந்தனர். அப்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தகராறில் சத்தியாவின் தம்பி சந்தோஷ் (29) என்பவரை மூவரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    இதுகுறித்து சந்தோஷ் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்கு பதிந்து கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியவர்களில் ஒருவரான கதிரேசன் என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் இருவரான மாரிமுத்து, ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×