என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாதாந்திர ஜி.எஸ்.டி. லாட்டரி அறிமுகம்
Byமாலை மலர்2 March 2020 4:48 AM GMT (Updated: 2 March 2020 4:48 AM GMT)
பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் ரசீதை அடிப்படையாக கொண்டு பரிசுகள் வழங்கும் புதிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை:
ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்கள் கொடுக்கும் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவே சரக்கு மற்றும் சேவை வரி லாட்டரி திட்டத்தை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும் அரசுக்கு வருவாய் கூடும் என்றும் மத்திய அரசு கணக்கு போட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான ரசீதை வைத்தே இந்த லாட்டரி குலுக்கலில் பங்கேற்க முடியும்.
இதற்காக ஜி.எஸ்.டி. நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்.) என்ற பெயரில் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களது ஜி.எஸ்.டி. பில்லுடன் கூடிய ரசீதை வைத்து செல்போன் செயலியில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
ஜி.எஸ்.டி. பில் வைத்திருக்கும் அனைவரும் இந்த லாட்டரி குலுக்கலில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்கள் கொடுக்கும் ரசீதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவே சரக்கு மற்றும் சேவை வரி லாட்டரி திட்டத்தை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அறிமுகம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும் அரசுக்கு வருவாய் கூடும் என்றும் மத்திய அரசு கணக்கு போட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியுடன் கூடிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான ரசீதை வைத்தே இந்த லாட்டரி குலுக்கலில் பங்கேற்க முடியும்.
இதற்காக ஜி.எஸ்.டி. நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்.) என்ற பெயரில் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களது ஜி.எஸ்.டி. பில்லுடன் கூடிய ரசீதை வைத்து செல்போன் செயலியில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இதன்மூலம் பொதுமக்கள் லாட்டரி பரிசு திட்டத்தில் பங்கு பெற முடியும். இந்த செயலி இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜி.எஸ்.டி. பில் வைத்திருக்கும் அனைவரும் இந்த லாட்டரி குலுக்கலில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X