search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருட்டு
    X
    குழந்தை திருட்டு

    பெசன்ட் நகர் கடற்கரையில் பெண் குழந்தை திருட்டு- போலீசார் விசாரணை

    பெசன்ட் நகர் கடற்கரையில் நரிக்குறவ தம்பதியின் பெண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    தஞ்சாவூரை சேர்ந்த நரிக்குறவ தம்பதியான பாஷாவும்(வயது 25), அவரது மனைவி சினேகாவும்(22) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில், பாசியினால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

    தினமும் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெசன்ட் நகர் கடற்கரையிலேயே அவர்கள் குழந்தையோடு துங்கிவிடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் தம்பதிகள் தங்களது குழந்தையோடு வழக்கம் போல் பெசன்ட் நகர் கடற்கரையில் படுத்து தூங்கினார்கள்.

    நேற்று அதிகாலையில் கண்விழித்து பார்த்தபோது பெண் குழந்தையை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தம்பதி குழந்தையை கண்டுபிடித்து தருமாறு சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×