என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்28 Feb 2020 5:29 PM GMT (Updated: 28 Feb 2020 5:29 PM GMT)
கன்னியாகுமரி அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வரும் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியா குமரி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் நேற்று அரசு பஸ்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். லீபுரம் சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் இருந்த வாலிபர் ஒருவர் கையில் பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த தனுஷ் கோடி (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திவந்த தனுஷ்கோடியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கஞ்சா யாரிடம் வாங்கினார் எனவும், யார், யாரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X