search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராணிப்பேட்டை அருகே வரதட்சணை கேட்டு சித்ரவதை- வாலிபர் கைது

    ராணிப்பேட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    வாலாஜா:

    சோளிங்கர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் புவனேஸ்வரி(22). சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு புது தெருவை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது வரதட்சனையாக 5½ பவுன் நகை பைக், 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் தாய் வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் வரதட்சனை வாங்கி வரவேண்டுமென கூறி புவனேஸ்வரியை கொடுமைபடுத்தி அவரது தாய் வீட்டிற்கு விரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து புவனேஸ்வரி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் ஜெயகணேஷ் மீது புவனேஸ்வரி பெற்றோர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து ஜெய்கணேசை கைது செய்தார். மேலும் மாமனார், மாமியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×