search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் பட்டமுத்து(வயது 26). அவர்கள் இருவரும் நேற்று அப்பகுதியில் நடந்த ஒருவரது வளைகாப்பு விழாவிற்கு சென்றனர். பின்பு நள்ளிரவு அங்கிருந்து முல்லை நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை பட்டமுத்து கவனிக்காமல் சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×