search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்.
    X
    கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்.

    சேலம் அருகே மூதாட்டி கொலை- வாலிபர் கைது

    சேலம் அருகே நகை கேட்டு தகராறில் ஈடுபட்ட வாலிபர் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    சேலம்:

    சேலம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லத்தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 75).

    இவர் நேற்று அங்குள்ள ரேசன் கடை அருகே வழக்கம் போல அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழனியம்மாளிடம் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் பழனியம்மாளின் கழுத்து உள்பட பல பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் நிலை குலைந்த மூதாட்டி கதறியபடி கீழே சாய்ந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். சிறிது நேரத்தில் மூதாட்டி பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற இரும்பாலை போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அங்குள்ள கேமிரா பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மூதாட்டியை கொலை செய்த வாலிபர் அடையாளம் தெரிந்தது. அவர் சிவதாபுரம் அருகே உள்ள வேடுகாத்தாம் பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பாலாஜி (வயது 20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் நேற்றிரவு அவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    கஞ்சா பழக்கம் உள்ள பாலாஜி தனியாக இருந்த மூதாட்டியை பார்த்து அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் காலில் அணிந்திருந்த வளையத்தையும் நைசாக பேசி கழற்றி எடுக்க திட்டமிட்டார்.

    அதன்படி அருகில் சென்று நைசாக பேசிய பாலாஜி வேலை செய்யும் இடத்தில் முன் பணம் வாங்கி உள்ளதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த மூக்குத்தி மற்றும் வளையத்தை தருமாறு பழனியம்மாளிடம் கேட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அவரை திட்டினார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் சரமாரியாக குத்தினார். பின்னர் தொடர்ந்து அவரை கத்தியால் குத்தியதால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட பழனியம்மாளுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×