search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி பெண் பலி

    செஞ்சி அருகே ஏரியில் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ள பணப்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா (வயது 45). கணவன்- மனைவி இருவரும் நேற்று முன்தினம் அருகாவூர் ஏரியில் மின் பிடிக்க சென்றனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

    இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியே சென்ற மல்லிகா நீண்ட நேரமாகியும், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் கண்ணன் மற்றும் உறவினர்கள் மல்லிகாவை பல்வேறு இடங்களில் தேடினர்.

    அப்போது அருகாவூர் ஏரியில் மல்லிகா பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மல்லிகா ஏரியில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×