என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே கூலி தொழிலாளிக்கு அடி-உதை: 3 பேர் கைது
Byமாலை மலர்27 Feb 2020 3:58 PM GMT
ராயக்கோட்டை அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 30). இவர் அதேஊரை சேர்ந்த தனது உறவினரான கிருஷ்ணன் (45) என்பவரிடம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் அந்த பணத்தை கிருஷ்ணன் திருப்பி கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை. விரைவில் கொடுக்கிறேன் என சிவராஜ் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களான அருணாச்சலம்(55), லட்சுமணன்(42) ஆகியோர் சிவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து சிவராஜ் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ சிற்றரசு வழக்குபதிவு செய்து, சிவராஜை தாக்கிய கிருஷ்ணன், அருணாச்சலம், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X