search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கெலமங்கலம் அருகே முதியவர் தற்கொலை

    கெலமங்கலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த மாதேவஅக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த ரமணிரெட்டி விவசாய நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

    இதுகுறித்து பைரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து, இறந்தவர் யார்? ஏன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×