என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே பரிகாரம் செய்வதாக கூறி நகையை பறித்த ஜோதிடர்
தேனி:
தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் 4-வது தெருவை சேர்ந்த மனோகரன்(51). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த ஒருவர் தான் ஜோதிடர் எனவும் வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர பரிகாரம் செய்தால் அது நிவர்த்தியாகிவிடும் எனவும் கூறியுள்ளார். பின்னர் மனோகரனின் மனைவியிடம் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை வாங்கி அதனை புளி உருண்டையில் வைத்து செம்பு பாத்திரத்தில் கொடுத்து பூஜை அறையில் வைத்து வழிபடுமாறு கூறியுள்ளார்.
ஜோதிடர் கூறியபடி பூஜை அறையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது புளி உருண்டைக்குள் தங்கசெயினை காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை தேடிச்சென்றனர். பழனிசெட்டிபட்டி தனியார் மருத்துவமனை அருகில் அந்த ஜோதிடர் இருந்தது தெரியவந்தது.
அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கண்ணன் மகன் முத்து(30) என தெரியவந்தது. அவரிடமிருந்த இரண்டரை பவுன் தங்கசெயினை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து இதுபோல் வேறுஏதேனும் நகை மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்