என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபழனியில் ஆட்டோவில் வந்து செல்போன் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்27 Feb 2020 8:09 AM GMT (Updated: 27 Feb 2020 8:09 AM GMT)
வடபழனியில் ஆட்டோவில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போரூர்:
கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று மாலை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள பூங்காவில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர்கள் திடீரென மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அப்பகுதியில் காவல் பணியில் இருந்த ஏட்டு வெங்கடப்பன், வேலாயுதம் ஆகியோரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஆட்டோவை விரட்டிச்சென்று வடபழனி பஸ் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாசம், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பதும் தெரிந்தது.
இருவரும் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவபிரகாசம் மீது ஏற்கனவே கொள்ளை வழக்கு உள்ளது.
கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று மாலை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள பூங்காவில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர்கள் திடீரென மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அப்பகுதியில் காவல் பணியில் இருந்த ஏட்டு வெங்கடப்பன், வேலாயுதம் ஆகியோரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஆட்டோவை விரட்டிச்சென்று வடபழனி பஸ் நிலையம் அருகே மடக்கிப் பிடித்து 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவபிரகாசம், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பதும் தெரிந்தது.
இருவரும் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சிவபிரகாசம் மீது ஏற்கனவே கொள்ளை வழக்கு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X