என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகன்கள் பராமரிக்காததால் விரக்தி- மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்26 Feb 2020 10:17 AM GMT (Updated: 26 Feb 2020 10:17 AM GMT)
உடன்குடி அருகே மகன்கள் பராமரிக்காத விரக்தியில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுயம்பு அம்மாள் (வயது 80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகனை தவிர அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சுயம்பு அம்மாள் மட்டும் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார். இவருடைய மகன்கள் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்பு அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுயம்பு அம்மாள் (வயது 80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகனை தவிர அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சுயம்பு அம்மாள் மட்டும் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார். இவருடைய மகன்கள் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்பு அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X