என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே 594 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்26 Feb 2020 10:08 AM GMT (Updated: 26 Feb 2020 10:08 AM GMT)
மதுரை அருகே தடை செய்யப்பட்ட 594 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கப்பலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் வந்த ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த முத்தரசு (34) என்வரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் முத்தரசுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முத்தரசு கொடுத்த தகவலனின்படி மேலக்கோட்டையை சேர்ந்த பாபுஜி (33), மதுரை பைக்காரா முத்து ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (53) ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 594 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தரசு, பாபுஜி, முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருமங்கலம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கப்பலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் வந்த ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த முத்தரசு (34) என்வரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
இதையடுத்து போலீசார் முத்தரசுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். முத்தரசு கொடுத்த தகவலனின்படி மேலக்கோட்டையை சேர்ந்த பாபுஜி (33), மதுரை பைக்காரா முத்து ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (53) ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 594 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தரசு, பாபுஜி, முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X