என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விவசாயிடம் நூதன முறையில் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆயிரம் கொள்ளை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மலர்வாணன்(59) விவசாயி. இவர் கோடியூரில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார். ஆனால் அவருக்கு ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க தெரியாது.
இதனால் அருகில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து ரூ 500 எடுத்து தரும்படி கேட்டார்.
அந்த நபரும் அவரிடம் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.500 எடுத்து கொடுத்து விட்டார்.
பின்னர் மலர்வாணன் ரசீது எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அந்த நபர் உங்கள் ஏ.டி.எம். கார்டுக்கு ரசீது வரவில்லை என கூறி கார்டை மலர்வாணனிடம் கொடுத்து விட்டார்.
இந்நிலையில் மலர்வாணன் நேற்று முன்தினம் மீண்டும் அதே ஏ.டி.எம். சென்று மற்றொரு நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரசீது எடுத்து தரும்படி கேட்டார்.
அப்போது அவர் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மலர்வாணன் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நூதன முறையில் விவசாயி கணக்கில் ரூ 20 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்து பதிவான வீடியோவை வெளியிட்டனர். அதில் கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்த வாலிபர் மலர்வாணனிடம் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அந்த படத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்