search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓட்டேரியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

    சென்னை ஓட்டேரியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அம்பத்தூர்:

    சென்னை ஓட்டேரி ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற வினோத்குமார் (34) ஆட்டோ டிரைவர். திருமணம் ஆனவர். ஒரு குழந்தையும் உள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு வினோத்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அங்கு இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிந்தார். அதை சுவர் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் தாய் கூச்சலிட்டு செல்போனை பிடுங்கினார்.

    இதுகுறித்து தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் அளித்தார். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தேவிகா அது குறித்து விசாரணை செய்தார்.

    ஆட்டோ டிரைவரின் செல்போனை சோதித்து பாரித்த போது சில பெண்களின் புகைப்படங்கள் தவறான நோக்கத்தோடு எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அயனாவரம் பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் வினோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×