search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: கொள்ளையனை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து

    வீட்டின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையனை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று உள்ளார்.

    இந்த நிலையில் மூர்த்தியின் வீட்டிற்குள் மர்ம நபர் புகுந்து திருடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சுரேஷ் என்பவர் கொள்ளையனை பிடிக்க முயன்றார்.

    உடனே கொள்ளையன் மறைத்த வைத்திருந்த கத்தியால் சுரேசின் கையை வெட்டினான். மேலும் மார்பு பகுதியிலும் குத்தினான்.

    சுரேசின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கொள்ளையனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து செவ்வாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த சுரேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விசாரணையில் பிடிபட்ட கொள்ளையனை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தேவராஜன் என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. அவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×