என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் மருந்து- மாத்திரைகளுக்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் இந்த கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்