என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் 27-ந்தேதி புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம்- கிருஷ்ணசாமி பேசுகிறார்
Byமாலை மலர்25 Feb 2020 12:21 PM GMT (Updated: 25 Feb 2020 12:21 PM GMT)
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து திருச்சியில் 27-ந்தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மலைக்கோட்டை வழுக்குப்பாறை ஆண்டாள் வீதியில் நாளை மறுநாள் (27-ந்தேதி, வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர்கள் குணா, தினகரன், இளையராஜா, பிச்சமுத்து, நம்பிராஜ் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி குடியுரிமை சட்டம் பாதுகாப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேசுகிறார்.
முடிவில் ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் சண்முகம் நன்றி கூறுகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X