search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவையில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

    கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கணேஷ் (26). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஆனந்தி (24). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்தநிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஆனந்தியின் தந்தை அவரிடம் பேசாமல் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்தி சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை பேரூரை சேர்ந்தவர் லட்சுமணன் (55). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனைமலை அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (21). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். அங்கு உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்காலில் மூழ்கி இறந்தார்.

    இதுகுறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×