search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த உடையாளூர், கீழத்தெருவை சேர்ந்தவர் ஜான் பீட்டர். விவசாயான இவருக்கு ஜோசப்ஆண்டனி (15) என்ற மகன் உள்ளார்.

    ஜோசப்ஆண்டனி, கும்பகோணம் நால்ரோட்டிலுள்ள மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான். ஜோசப்ஆண்டனி, அப்பள்ளியிலுள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வருகிறான்.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு, விடுதியின் இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த போது,, குறுக்கே சென்ற மின்சார செல்லும் ஒயரில் எதிர்பாராதவிதமாக ஜோசப்ஆண்டனியின் கைபட்டது. இதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததால், சக மாணவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனையறிந்த விடுதி வார்டன் அரண், ஜோசப் ஆண்டனியை , கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×