என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி 2 பேர் படுகாயம்
களக்காடு:
வள்ளியூர் அருகே உள்ள குமார புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 48) விவசாயி. சம்பவத்தன்று இவரும், இவரது உறவினர் முருகனும், நெல்லை அருகே உள்ள ஆரைகுளத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். நாங்குநேரி நான்குவழிச் சாலையில் தனியார் மில் அருகே சென்ற போது பைக்கிற்கு முன்னால் சென்ற லாரி திடீர் என இடது பக்கம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பைக்கும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் சென்ற முத்துகிருஷ்ணனும், அவரது உறவினர் முருகனும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் 2 பேரும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் லாரி டிரைவர் திருப்பத்தூர் அருகே உள்ள சென்னராம்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மகன் சுகுமார் (42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்