search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மேலூர் அருகே விபத்து- வாலிபர் பலி

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதில் 8 பேர் காயம் அடைந்தனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் பொட்டப்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார் (வயது40), சுரேஷ் (30) உள்பட 6 பேர் டிராக்டரில் வைக்கோல் வாங்க மேலூர் புறப்பட்டுச் சென்றனர். சதீஷ்குமார் டிராக்டரை ஓட்டினார்.

    மேலூர் 4 வழிச்சாலையில் சத்தியபுரம் பகுதியில் டிராக்டர் சென்றபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி கார் வந்தது. வேகமாக வந்த அந்த கார் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின் பகுதியில் மோதியது.

    இதில் டிராக்டரின் பின்பகுதி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 5 தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த பொட்டப்பட்டி சுரேஷ், தர்மராஜ், வடிவேலு மற்றும் காரில் வந்தவர்கள் என 8 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட சுரேஷ் வழியிலேயே இறந்தார்.

    விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×