என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியார்... 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம்
Byமாலை மலர்25 Feb 2020 6:15 AM GMT (Updated: 25 Feb 2020 6:15 AM GMT)
கோவில்பட்டி கோவில் கொடைவிழாவில் 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து அபிஷேகம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 65-ம் ஆண்டு கொடை விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 11 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு கோவிலில் உள்ள படி 18-க்கும் படிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 8.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு பக்தர்களின் 21 அக்னிச்சட்டி ஊர்வலம், 9 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு பழ பூஜை நடைபெற்றது. பின்னர், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் ராஜகணபதி அருள்தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 65-ம் ஆண்டு கொடை விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 11 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு கோவிலில் உள்ள படி 18-க்கும் படிபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 8.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு பக்தர்களின் 21 அக்னிச்சட்டி ஊர்வலம், 9 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு பழ பூஜை நடைபெற்றது. பின்னர், 21 அரிவாள்கள் மீது நின்று சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து பக்தர்கள் 68 கிலோ மிளகாய் தூளை கரைத்து சாமியாருக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அன்ன தானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X