search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டு பேசிய காட்சி
    X
    போலீஸ் சூப்பிரண்டு பேசிய காட்சி

    குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு

    குற்ற செயல்களை தடுக்க நகரம்-கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
    வெள்ளியணை:

    கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தின் சார்பில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஏமூரில் நடைபெற்றது. இதற்கு ஏமூர் ஊராட்சி மன்றத்தலைவர் வி.சி.கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டுசுகுமார், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது, அது குறித்த தகவல்களை அப்பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் அந்த வீட்டை போலீசார் கண்காணித்து திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். தங்கள் பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறும்போது அது குறித்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர் குறித்து விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது.

    நகரம் மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அப்போது தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும். மேலும் குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முடியும். இதற்கு போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஹெல்மெட் , சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். மதுபானம் அருந்தி மற்றும் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் அனைத்து அசல் ஆவணங்களையும் வாகனம் ஓட்டும்போது வைத்திருத்தல் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து காவலன் செயலி குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகர் நன்றி கூறினார்.
    Next Story
    ×