search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டையில் பிளேடால் கழுத்தை அறுத்து மூதாட்டி தற்கொலை

    தேன்கனிக்கோட்டையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கீழ் கவணையை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருடைய மனைவி முனிராஜம்மா (வயது65). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட முனிராஜம்மா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முனிராஜம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×