என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடித்துவிட்டு தகராறு - நண்பரை அடித்து கொன்ற வாலிபர்
Byமாலை மலர்24 Feb 2020 11:33 AM GMT (Updated: 24 Feb 2020 11:33 AM GMT)
திருப்பூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பல்லடம்:
மதுரை மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்தவர் முருகன் (வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் அருஞ்சுனைமுத்து(25). கட்டிட தொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மல்லே கவுண்டம் பாளையத்தில் தங்கி வெள்ளிங்கிரி என்பவருக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் முருகனும், அருஞ்சுனைமுத்துவும் அறையில் இருந்தனர். பின்னர் மதியம் சாப்பிட்டு விட்டு மதுகுடிக்க சென்றனர்.
அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஒருவருக் கொருவர் கேலி, கிண்டல் செய்து கொண்டனர்.
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி ஒருவருக் கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அருஞ்சுனை முத்து, முருகனை கீழே தள்ளி விட்டார். பின்னர் அவரின் தலையின் மீது கருங்கல்லை தூக்கி போட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அருஞ்சுனை முத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருஞ்சுனை முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்தவர் முருகன் (வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் அருஞ்சுனைமுத்து(25). கட்டிட தொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மல்லே கவுண்டம் பாளையத்தில் தங்கி வெள்ளிங்கிரி என்பவருக்கு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் முருகனும், அருஞ்சுனைமுத்துவும் அறையில் இருந்தனர். பின்னர் மதியம் சாப்பிட்டு விட்டு மதுகுடிக்க சென்றனர்.
அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஒருவருக் கொருவர் கேலி, கிண்டல் செய்து கொண்டனர்.
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி ஒருவருக் கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அருஞ்சுனை முத்து, முருகனை கீழே தள்ளி விட்டார். பின்னர் அவரின் தலையின் மீது கருங்கல்லை தூக்கி போட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அருஞ்சுனை முத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருஞ்சுனை முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X