search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    ரூ.33ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.94அதிகரித்து ரூ.4,166 ஆகவும் சவரனுக்கு ரூ.752 அதிகரித்து ரூ.33,328-ஆகவும் விற்பனையாகிறது.
    சென்னை:

    புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலை இல்லாமல் காணப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் பரவிய கொரோனா வைரசால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

    சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை பல நாடுகள் நிறுத்தின. சீனாவுக்கு ஏற்றுமதியும் தடைபட்டது. இதனால் சர்வதேச சந்தையில் பொருளாதார தேக்க நிலை உருவானது. எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ததால் தங்கம் விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ரூ.4,166ஆக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.752 அதிகரித்து ரூ.33,328 ஆனது.

    வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.53.30-க்கு விற்பனையாகிறது.
    Next Story
    ×