என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம்
Byமாலை மலர்24 Feb 2020 9:41 AM GMT (Updated: 24 Feb 2020 9:41 AM GMT)
புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனியை சேர்ந்தவர் மாங்காளி (வயது58). இவர் புதுவை காமராஜர்நகர் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் புதுவை பாரதிவீதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் முழுநேர காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மாதம் ஒரு முறை வீட்டுக்கு சென்று குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு வருவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாங்காளி வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அவருடன் வேலைபார்த்து வரும் மற்றொரு ஊழியர் மாங்காளியின் மகன் வீரக்கண்ணுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் மாங்காளியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாங்காளி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து மாங்காளியின் மர்மச்சாவு குறித்து அவரது மகன் வீரக்கண்ணு ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனியை சேர்ந்தவர் மாங்காளி (வயது58). இவர் புதுவை காமராஜர்நகர் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் புதுவை பாரதிவீதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் முழுநேர காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மாதம் ஒரு முறை வீட்டுக்கு சென்று குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு வருவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாங்காளி வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அவருடன் வேலைபார்த்து வரும் மற்றொரு ஊழியர் மாங்காளியின் மகன் வீரக்கண்ணுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் மாங்காளியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாங்காளி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து மாங்காளியின் மர்மச்சாவு குறித்து அவரது மகன் வீரக்கண்ணு ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X