search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம்

    புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனியை சேர்ந்தவர் மாங்காளி (வயது58). இவர் புதுவை காமராஜர்நகர் வள்ளலார் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் புதுவை பாரதிவீதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் முழுநேர காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மாதம் ஒரு முறை வீட்டுக்கு சென்று குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு வருவார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாங்காளி வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் தலையில் அடிபட்டு கிடப்பதாக அவருடன் வேலைபார்த்து வரும் மற்றொரு ஊழியர் மாங்காளியின் மகன் வீரக்கண்ணுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் மாங்காளியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாங்காளி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதையடுத்து மாங்காளியின் மர்மச்சாவு குறித்து அவரது மகன் வீரக்கண்ணு ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×