search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
    X
    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

    18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி- ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்குகிறார்

    ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்குகிறார்.
    ராயபுரம்:

    வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆர்.கே.நகர் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை அருகே இளைய முதலி தெருவில் இன்று மாலை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் முன்னிலை வகிக்கிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விழாவில் பங்கேற்று 1 ஷேர் ஆட்டோ, ஸ்கூட்டர், இரு சக்கர மிதிவண்டி, ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர கைவண்டி, தள்ளுவண்டி, டிபன் வண்டி, மீன்பாடி வண்டி, வெட்கிரைண்டர், ஏர் கூலர், மிக்சி, தையல் மிஷின், இட்லிபானை, அன்னக்கூடை, மில்க் பாய்லர் குக்கர், எவர் சில்வர் பிளேட், புடவைகள்,வேட்டிகள், ஆட்டோ ஓட்டுநருக்கான யூனிபார்ம், பேட், ஸ்டெம்ப், பால், அடங்கிய கிரிக்கெட் கிட், கால்பந்தாட்ட வாலிபால் உள்ளிட்ட 18, 000பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    விழாவில் செய்தி தொடர்பாளர் லியாகத் அலிகான், பகுதி செயலாளர்கள் ஆர். எஸ். ஜனார்த்தனம், பெரம்பூர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் டேவிட், ஞானசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்செய்து வருகிறார்.
    Next Story
    ×