என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புளியங்குடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
புளியங்குடி:
புளியங்குடி அண்ணா தெருவை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருக்கு அழகம்மாள்(வயது 45) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அழகம்மாள் கண்பார்வை இல்லாதவர். இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் கண்பார்வை இல்லாமல் வாழ்வதைவிட இறந்து போவதே மேல் என்று கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்த முருகன், தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்