search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

    வந்தவாசி அடுத்த தேசூரில் முன்விரோத காரணமாக செல்போன் கடைக்கு வந்த வாலிபரை சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த திருமால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் ராஜசேகர் (வயது25), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் (21) என்பவருக்கும் கடந்த பொங்கல் பண்டிகையின்போது திருமால்பாடி கோவிலுக்கு சென்றபோது தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று ராஜசேகர் தேசூரில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அரவிந்தன் அவரது நண்பர்கள் திவாகர் (23) துரைமுருகன் (21) ரகுமான்( 22) ஆகியோர் கட்டை, இரும்பு ராடால் ராஜசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    சம்பவம் தொடர்பாக ராஜசேகர் நேற்று தேசூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், திவாகர், துரைமுருகன், ரகுமான் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×