என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த திருமால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ் மகன் ராஜசேகர் (வயது25), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் (21) என்பவருக்கும் கடந்த பொங்கல் பண்டிகையின்போது திருமால்பாடி கோவிலுக்கு சென்றபோது தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று ராஜசேகர் தேசூரில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அரவிந்தன் அவரது நண்பர்கள் திவாகர் (23) துரைமுருகன் (21) ரகுமான்( 22) ஆகியோர் கட்டை, இரும்பு ராடால் ராஜசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக ராஜசேகர் நேற்று தேசூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், திவாகர், துரைமுருகன், ரகுமான் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்