search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    புதுவையில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து மரணம்

    புதுவையில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை புதுசாரம் தென்றல் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது47). ஆட்டோ டிரைவர். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே சரவணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் இருந்து வந்தது. ஆனால் இந்த நோய்க்காக சரவணன் மருந்து சாப்பிடுவது இல்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து அதிக குடிபோதையில் சரவணன் இறந்து போனாரா? அல்லது வலிப்பு நோய் காரணமாக இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×