என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து மரணம்
புதுச்சேரி:
புதுவை புதுசாரம் தென்றல் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது47). ஆட்டோ டிரைவர். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே சரவணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் இருந்து வந்தது. ஆனால் இந்த நோய்க்காக சரவணன் மருந்து சாப்பிடுவது இல்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து அதிக குடிபோதையில் சரவணன் இறந்து போனாரா? அல்லது வலிப்பு நோய் காரணமாக இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்