search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    காரமடையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க-வைர நகைகள் திருட்டு

    காரமடையில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க-வைர நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி ரோடு பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன்(58).இவர் உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 18-ந்தேதி வெளியூர் சென்று விட்டார்.

    பிறகு 19-ந்தேதி இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் கீழே சிதறி கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 32 பவுன் தங்கை நகைகள் மற்றும் வைர மோதிரம், கம்மல் உள்ளிட்டவைகள் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து சீனிவாசன் உடனடியாக காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்களிடம் விசாரனை செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டுப்போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

    Next Story
    ×