என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
Byமாலை மலர்21 Feb 2020 9:38 AM GMT (Updated: 21 Feb 2020 9:38 AM GMT)
வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். அதே சமயத்தில் கம்பத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. இந்த பஸ்சை வெங்கடேசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
நேற்று இரவு 10 மணியளவில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையம் அருகே பஸ் வந்து கொண்டு இருந்த போது சாலையின் குறுக்கே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக 2 பஸ் டிரைவர்களும் திருப்பினர்.
இதில் எதிர்பாராத விதமாக பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் டிரைவர்கள் வெங்கடேசன், சீனிவாசன், பஸ்சில் பயணித்த பெரியகுளத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வத்தலக்குண்டு நகரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள் அதிக அளவு சுற்றி வருகின்றனர். அவர்கள் சாலையின் குறுக்கே முறையற்று நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களும் வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து கம்பம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். அதே சமயத்தில் கம்பத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. இந்த பஸ்சை வெங்கடேசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
நேற்று இரவு 10 மணியளவில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையம் அருகே பஸ் வந்து கொண்டு இருந்த போது சாலையின் குறுக்கே மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக 2 பஸ் டிரைவர்களும் திருப்பினர்.
இதில் எதிர்பாராத விதமாக பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் டிரைவர்கள் வெங்கடேசன், சீனிவாசன், பஸ்சில் பயணித்த பெரியகுளத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வத்தலக்குண்டு நகரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள் அதிக அளவு சுற்றி வருகின்றனர். அவர்கள் சாலையின் குறுக்கே முறையற்று நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களும் வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X