என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 45 நெல் மூடைகள் திருட்டு
Byமாலை மலர்20 Feb 2020 6:18 PM GMT (Updated: 20 Feb 2020 6:18 PM GMT)
கடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 45 நெல் மூடைகள் திருட்டு போயின.
சாயல்குடி:
கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ நெல் ரூ.19.50-க்கு விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.இதற்கான தொகை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலாடி அருகே பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்ற விவசாயி 300-நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக மேலச்செல்வனூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பாக அடுக்கி வைத்து பாதுகாப்பாக மூடி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதில் 45 நெல் மூடைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ நெல் ரூ.19.50-க்கு விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.இதற்கான தொகை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் மூடைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலாடி அருகே பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்ற விவசாயி 300-நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக மேலச்செல்வனூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பாக அடுக்கி வைத்து பாதுகாப்பாக மூடி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதில் 45 நெல் மூடைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X