என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்கம் அருகே கண்டெய்னர் லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி விவசாயி இவரது மகன் விஜய் (வயது 19) கடலாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன் (19) இருவரும் நண்பர்கள். இருவரும் இன்று காலை பைக்கில் வளையாம்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
செங்கம் அடுத்த குயிலம் கூட்ரோடு அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிடிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் சென்ற பைக் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் வந்த விஜய், தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்