search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்சி:

    திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் பூபேஷ் கண்ணா (வயது17). பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பூபேஷ் கண்ணா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். 

    இதுகுறித்து தெற்கு புலனாய்வு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபேஷ் கண்ணாவின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப் பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×