என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளிப்பு
Byமாலை மலர்20 Feb 2020 1:27 PM GMT (Updated: 20 Feb 2020 1:27 PM GMT)
விழுப்புரம் அருகே நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.தொட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது 42). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவருக்கும் இவருடைய அக்காள் மும்தாஜிக்கும் பொதுவான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை அப்துல்ரசாக் விற்க முயன்றுள்ளார். அதற்கு மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அப்துல்ரசாக் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் மும்தாஜின் மளிகை கடை எதிரே சென்று திடீரென தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதில் பலத்த தீக்காயமடைந்த அப்துல்ரசாக்கை அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று காப்பாற்றி அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X