என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நத்தம் அருகே காரில் கடத்தி டிரைவர் அடித்து கொலை
நத்தம்:
நத்தம் அருகே உள்ள கல்வேலிப்பட்டி பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவர் செல்லப்ப நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கருப்பணன் (வயது 45) என்பதும், இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் எனவும் தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். உறவினர்கள் சிலர் காரில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.
கருப்பணன் உடலின் பல பாகங்களில் காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நிலப்பிரச்சினை தொடர்பாக அவரது உறவினர்கள் சிலர் கருப்பணன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
எனவே அவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்